சென்னை : பா.ஜ.க. செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : பா.ஜ.க. செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். மற்றும் மிசோரமில் எம்.என்.எப் கட்சிகள் ஆட்சியமைக்க உள்ளன.
இந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பா.ஜ.க.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை," என்று அவர் பதிலளித்தார்.
சமீபத்தில் பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, “10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் யார் பலசாலி..?” என்று பதிலளித்தார். மேலும், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையாக முயற்சிப்பதாகக் கருத்து கூறியிருந்தார்.
தமிழக அரசியலில் விரைவில் புதிய கட்சியை தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருடைய தற்போதைய பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். மற்றும் மிசோரமில் எம்.என்.எப் கட்சிகள் ஆட்சியமைக்க உள்ளன.
இந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பா.ஜ.க.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை," என்று அவர் பதிலளித்தார்.
சமீபத்தில் பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, “10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் யார் பலசாலி..?” என்று பதிலளித்தார். மேலும், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையாக முயற்சிப்பதாகக் கருத்து கூறியிருந்தார்.
தமிழக அரசியலில் விரைவில் புதிய கட்சியை தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருடைய தற்போதைய பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.