தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படுவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடியவுள்ளது.
தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படுவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடியவுள்ளது.
தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் வரை இருக்க வேண்டிய சூழலில், அதற்கு முன்பாகவே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதையடுத்து, 5 மாநிலங்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிப் பரபர தகவல்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டிகள் நிலவியது. இந்தத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் 92 இடங்களையும், பாஜக 82 இடங்களையும் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் கடும் போட்டிக்கு நடுவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் பாஜக 111 இடங்களைப் பிடித்து காங்கிரசைப் (107 இடங்கள்) பின்னுக்குத் தள்ளியது.
இதற்கிடையில், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் , 88 இடங்களைப் பிடித்து டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலையிலும் அதற்கு அடுத்த நிலையில் 21 இடங்களை காங்கிரசும், குறைந்த பட்சமாக இரண்டு இடங்களை பாஜகவும் பிடித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் முதல் 57 இடங்களை காங்கிரசும், அடுத்து 24 இடங்களைப் பிடித்து பாஜக அதற்கடுத்த நிலையிலும் உள்ளது.
இதைப்போலவே, மிசோரமில் 40 தொகுதிகளில் மி.தே.மு (மிசோரம் தேசிய முன்னணி) 27 இடங்களைப் பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது.
தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் வரை இருக்க வேண்டிய சூழலில், அதற்கு முன்பாகவே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதையடுத்து, 5 மாநிலங்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிப் பரபர தகவல்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டிகள் நிலவியது. இந்தத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் 92 இடங்களையும், பாஜக 82 இடங்களையும் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் கடும் போட்டிக்கு நடுவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் பாஜக 111 இடங்களைப் பிடித்து காங்கிரசைப் (107 இடங்கள்) பின்னுக்குத் தள்ளியது.
இதற்கிடையில், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் , 88 இடங்களைப் பிடித்து டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலையிலும் அதற்கு அடுத்த நிலையில் 21 இடங்களை காங்கிரசும், குறைந்த பட்சமாக இரண்டு இடங்களை பாஜகவும் பிடித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் முதல் 57 இடங்களை காங்கிரசும், அடுத்து 24 இடங்களைப் பிடித்து பாஜக அதற்கடுத்த நிலையிலும் உள்ளது.
இதைப்போலவே, மிசோரமில் 40 தொகுதிகளில் மி.தே.மு (மிசோரம் தேசிய முன்னணி) 27 இடங்களைப் பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது.