கோவை : கோவையில் வாலன்குளத்தில் வீசப்பட்ட குதிரையின் உடலைக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மீட்டெடுத்தனர்.
கோவை : கோவையில் வாலன்குளத்தில் வீசப்பட்ட குதிரையின் உடலைக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மீட்டெடுத்தனர்.

குதிரையின் சடலத்தை மீட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், " காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல்களை அவர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்குத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, " என்றனர்.
மீட்புப் பணியில் முதற்கட்டமாக, குளத்தில் கிடந்த குதிரையின் உடல் ஜே.சி.பி உதவியால் கண்டெடுக்கப்பட்டு, அதன்பின் கயிறு கட்டி வெளியில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குளத்தின் அருகே குழிதோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து அருகேயுள்ள மக்கள் கூறும்போது மர்ம நபர்கள் குளத்தில் குதிரையின் உடலை எறிந்திருக்கலாம் என்றனர்.