குன்னூர் நகராட்சி ஆணையர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : துப்புறவுத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி : அரசியல் தலையீடு காரணமாக குன்னூர் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து துப்புறவுத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி : அரசியல் தலையீடு காரணமாக குன்னூர் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து துப்புறவுத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குன்னூருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையராக சரஸ்வதி பொறுப்பேற்றார். நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை உள்வாடகைக்கு விட்ட நபர்களை வெளியேற்றி, நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். நகராட்சி வருமானத்தைப் பெருக்கும் வகையில், நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில், உள்வாடகை கடைகளை மீட்டெடுக்கவும் அதிரடி முயற்சிகள் மேற்கொண்டார்.

மேலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கட்டிய விதிமீறி கட்டிய அபார்ட்மென்ட்' கட்டிடத்திற்கு கடந்த 6-ம் தேதி அதிரடியாக 'சீல்' வைத்தார். இந்த நிலையில், சென்னை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக இணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், 'குன்னூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, வேலுர் மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்,' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



குன்னூர் நகராட்சி ஆணையரின் இந்த திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 12-ம் தேதி குன்னூர் வி.பி. தெருவில் அனைத்துஅமைப்புகளையும் ஒன்றிணைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், நகராட்சியைச் சேர்ந்த 175 துப்புறவு தொழிலாளர்கள், பணிக்கு செல்லாமல் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...