கடன் விவகாரத்தில் கடத்தப்பட்ட பவர் ஸ்டார் மனைவி மீட்பு : வடமாநில கடத்தல் கும்பல் கைது

நீலகிரி : உதகை பங்களாவில் கடன் விவகாரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டாரின் மனைவியை உதகை போலீசார் மீட்டதோடு, கடத்தல் கும்பலை கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



நீலகிரி : உதகை பங்களாவில் கடன் விவகாரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டாரின் மனைவியை உதகை போலீசார் மீட்டதோடு, கடத்தல் கும்பலை கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், பெங்களுரை சேர்ந்த ஆசூர் ஆலம், செல்வின், நவாஸ், பீரித்தி ஆகியோரிடம் ரூ. 95 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதுகுறித்து இருதரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி ஜூலி இருவரையும் சிலர் கடத்தி, உதகையில் வைத்திருப்பதாக அவர்களது மகள் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், உதகையில் பவர் ஸ்டாருக்கு சொந்தமான பங்களாவை எழுதி வைக்குமாறு கடத்தியவர்கள் மிரட்டியுள்ளனர். அந்த பங்களா, அவரின் மனைவி ஜுலி பெயரில் உள்ளதையடுத்து, பவர் ஸ்டாரை விடுவித்தால் எழுதி தருவதாக ஜூலி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். 

உடனே, சென்னை கிளம்பிய பவர் ஸ்டார், கோயம்பேடு காவல்நிலையத்தில் தனது மனைவியை சிலர் உதகையில் ஒரு பங்களாவில் கடத்தி அடைத்து வைத்திருப்பதாக புகாரளித்துள்ளார். இதையடுத்து, உதகை ஜி1 காவல்துறையினர் ஜூலியை மீட்டு, கடத்திய 4 பேரையும் கைது செய்தனர். பின் அவர்கள் சென்னை கோயம்பேடு காவல்நிலைய காவல் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜூலி பேசுகையில், "பெங்களுரை சேர்ந்த 4 பேர் என்னை உதகைக்கு கடத்தி வந்து தனியார் பங்களாவில் அடைத்து வைத்திருந்தனர்.எங்களுக்குச் சொந்தமான உதகை பங்களாவை எழுதி வைக்கச் சொல்லி வட மாநில இளைஞர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்," என்றார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...