திருப்பூர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உழைப்பு தானம் மேற்கொண்டனர்.
திருப்பூர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உழைப்பு தானம் மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து அத்தியாவசமான மருத்துவ சேவைகளுக்கு கோவை வர வேண்டியுள்ளது. இதனால் திருப்பூர் வாசிகள், திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கக் கோரி டிசம்பர் 11- ம் தேதி பாரதியார் பிறந்தநாளன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானம் மேற்கொள்வது என திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில் அவிநாசி சாலைப் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானத்தில் ஈடுபட்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்திலுள்ள குப்பைகள், மற்றும் புட்கள், ஆகியவற்றைச் சுத்தம் செய்து மருத்துவமனையிலுள்ள கழிவறைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தனர்.
இந்தத் தூய்மை பணிகளில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர தலைவர் சம்பத், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு உழைப்பு தானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து அத்தியாவசமான மருத்துவ சேவைகளுக்கு கோவை வர வேண்டியுள்ளது. இதனால் திருப்பூர் வாசிகள், திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கக் கோரி டிசம்பர் 11- ம் தேதி பாரதியார் பிறந்தநாளன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானம் மேற்கொள்வது என திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில் அவிநாசி சாலைப் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானத்தில் ஈடுபட்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்திலுள்ள குப்பைகள், மற்றும் புட்கள், ஆகியவற்றைச் சுத்தம் செய்து மருத்துவமனையிலுள்ள கழிவறைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தனர்.
இந்தத் தூய்மை பணிகளில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர தலைவர் சம்பத், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு உழைப்பு தானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.