கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள சிறுத்தையால் பரபரப்பு : பொதுமக்கள் பீதி

நீலகிரி : குன்னூர் அருகே இருக்கும் கோத்தகிரி அளக்கரை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பீதியடைதுள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே இருக்கும் கோத்தகிரி அளக்கரை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பீதியடைதுள்ளனர். 

கோத்தகிரி அளக்கரையில் புதூர், காமராஜர் நகர் மற்றும் சேலாடா உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், வனமும், அதனையொட்டி தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, காமராஜர் நகர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள ஓரு பாறைக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை, அடிக்கடி சாலையை கடந்து செல்வதும், அங்குள்ள மரங்களில் ஏறி அமர்ந்து கொள்வதையும் காணும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், தோட்டப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. 

மேலும், குடியிருப்பு பகுதிகளிடையே தொடர்ந்து சுற்றித் திரியும் இந்த சிறுத்தை, ஐந்துக்கும் மேற்பட்ட ஆடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொன்றுள்ளது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "வனத்துறையினர் இப்பகுதியில் உலா வரும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...