கோவை : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை பி.கே.புதூர் பகுதியில் ரூ. 2.95 கோடி மதிப்பில் குனியமுத்தூர் - இடையர்பாளையம் முதல் கோவைப்புதூர் வரையிலான நான்கு வழித்தடத்தை, பல்வழித்தடமாக மேம்படுத்துவதற்கான பூமிபூஜையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் பல்வேறு சாலை விரிவாக்கத்தினால் விபத்துகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலை, பால வேலைகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் கட்சி, சாதி வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் பழகி வருகிறேன்.
.
இதையடுத்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது. அந்த ஆலையை திறக்க முயற்சி என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. என்றார்.
சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துகள் பரப்படுவது குறித்த கேள்விக்கு, இது ஆரேக்கியமாக இருக்காது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித சாதிய வேறுபாடு இன்றி இருந்து வருகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை பி.கே.புதூர் பகுதியில் ரூ. 2.95 கோடி மதிப்பில் குனியமுத்தூர் - இடையர்பாளையம் முதல் கோவைப்புதூர் வரையிலான நான்கு வழித்தடத்தை, பல்வழித்தடமாக மேம்படுத்துவதற்கான பூமிபூஜையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் பல்வேறு சாலை விரிவாக்கத்தினால் விபத்துகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலை, பால வேலைகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் கட்சி, சாதி வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் பழகி வருகிறேன்.
.
இதையடுத்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது. அந்த ஆலையை திறக்க முயற்சி என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. என்றார்.
சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துகள் பரப்படுவது குறித்த கேள்விக்கு, இது ஆரேக்கியமாக இருக்காது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித சாதிய வேறுபாடு இன்றி இருந்து வருகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.