கோவை : கோவையில் சோமையம்பாளையம் பகுதியில், திடீரென 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை : கோவையில் சோமையம்பாளையம் பகுதியில், திடீரென 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவையில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரகிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில், சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த யானைகள், கூட்டங்கூட்டமாக உலா வருவதைக் கண்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். இம்முயற்சியினால், யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளைக் கடந்து ஒரு முட்காட்டில் பதுங்கி நிற்க, அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பகல் வேளை என்பதால் அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடன் யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.
கோவையில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரகிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில், சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த யானைகள், கூட்டங்கூட்டமாக உலா வருவதைக் கண்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். இம்முயற்சியினால், யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளைக் கடந்து ஒரு முட்காட்டில் பதுங்கி நிற்க, அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பகல் வேளை என்பதால் அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடன் யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.