இந்தியாவின் தலைமை ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைமை ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014-ம் ஆண்டு அக்டோபர் 16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காகக் கடந்த ஜூன் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, காலியாக இருந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதாரத்துறை வல்லுநர்கள் சிலரது பெயரை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஹைதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோரது பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014-ம் ஆண்டு அக்டோபர் 16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காகக் கடந்த ஜூன் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, காலியாக இருந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதாரத்துறை வல்லுநர்கள் சிலரது பெயரை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஹைதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோரது பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.