திருப்பூர் : மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் : மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள குமரலிங்கம், சர்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரதொழுவு வாய்க்கால்கள் மூலம் சுமார் 7500 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதில் விவசாயிகள் சுமார் 5500 ஏக்கர் வரையிலும் நெல் பயிரிட்டுள்ளனர். மீதமுள்ள ஏக்கரில் கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், பல இடங்களில் கடந்தவாரம் பெய்த புயல் மழையால், செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக அறுவடையைத் தொடங்கினர். ஆனால், நெற்பயிர்கள் ஈரப்பதமாக இருப்பதால் களத்தில் தார்பாய் விரித்து அதில் நெல்மணிகளை பரப்பிக் காய வைத்துள்ளனர்.
மேலும், நெல் அறுவடை நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதால், அவற்றை விற்க அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள குமரலிங்கம், சர்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரதொழுவு வாய்க்கால்கள் மூலம் சுமார் 7500 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதில் விவசாயிகள் சுமார் 5500 ஏக்கர் வரையிலும் நெல் பயிரிட்டுள்ளனர். மீதமுள்ள ஏக்கரில் கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், பல இடங்களில் கடந்தவாரம் பெய்த புயல் மழையால், செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக அறுவடையைத் தொடங்கினர். ஆனால், நெற்பயிர்கள் ஈரப்பதமாக இருப்பதால் களத்தில் தார்பாய் விரித்து அதில் நெல்மணிகளை பரப்பிக் காய வைத்துள்ளனர்.
மேலும், நெல் அறுவடை நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதால், அவற்றை விற்க அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.