கோவை : கோவை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் டாக்டர் அம்பேத்கரின் 62 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.
கோவை : கோவை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் டாக்டர் அம்பேத்கரின் 62 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இன்று அவருடைய 62 -வது நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச் சேர்ந்த 40 -க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்பு திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், 20 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி கோவையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மனு கொடுத்தும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக சமூக நீதிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் போலவே, பாரதியார் பல்கலைக்கழகத்திலும் டாக்டர். அம்பேத்கரின் உருவப்படத்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இன்று அவருடைய 62 -வது நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச் சேர்ந்த 40 -க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்பு திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், 20 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி கோவையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மனு கொடுத்தும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக சமூக நீதிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் போலவே, பாரதியார் பல்கலைக்கழகத்திலும் டாக்டர். அம்பேத்கரின் உருவப்படத்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.