நீலகிரி : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுத்தையொட்டி, இன்று அ.தி.மு.க. உதகை நகர கழகம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
நீலகிரி : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுத்தையொட்டி, இன்று அ.தி.மு.க. உதகை நகர கழகம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் மவுன அஞ்சலி பேரணியை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, உதகை நகர அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. உதகை சேரிங் கிராஸ் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம், காபி ஹவுஸ் சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
