சென்னை : மூத்த தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மூத்த தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் படைப்புலக எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அதோடு, தனது உரைகள், கதைகள் மூலமாக சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உறுவானது குறிப்பிடத்தக்கது.
சங்கீத நாடக அகாடமி விருது, இயல் விருது, சிறந்த நாவலுக்கான விருது, சிறந்த இலக்கியத்திற்கான விருது, சி.கே.கே. இலக்கிய விருது, ஞானவானி விருது, இளம் சாதனையாளர் விருது, கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழ் படைப்புலக எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அதோடு, தனது உரைகள், கதைகள் மூலமாக சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உறுவானது குறிப்பிடத்தக்கது.
சங்கீத நாடக அகாடமி விருது, இயல் விருது, சிறந்த நாவலுக்கான விருது, சிறந்த இலக்கியத்திற்கான விருது, சி.கே.கே. இலக்கிய விருது, ஞானவானி விருது, இளம் சாதனையாளர் விருது, கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.