கோவையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : வெள்ளலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்களைக் கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : வெள்ளலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்களைக் கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, வெள்ளலூர் பட்டணம் சாலையைச் சேர்ந்தவர் தமயந்தி(35). இவர் முல்லை நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருடைய கழுத்தில் இருந்த 3 பவுன் நகையைப் பறிக்க முயன்றனர். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். 

இதையடுத்து, அவர்களை போத்தனூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த விஜயராகவன் (25), கார்த்திக் (24), என்பது தெரிய வந்தது. சாய்பாபா காலனியைச் சேர்ந்த ரமாதேவி (71), என்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்து விட்டு தமயந்தியிடம் நகை பறிக்க முயன்றபோது, அவர்கள் சிக்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.300 மற்றும் 4 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடரப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த வழக்குத் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :- சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விஜயராகவன், கார்த்திக் ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். சரியான வேலைக் கிடைக்காததால் போதிய வருமானமின்றி சுற்றியுள்ளனர். 

இதையடுத்து, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். இது கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவர்கள் மீது சென்னையில் மட்டும் 20 -க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது குண்டர் சட்டம் கூட பாய்ந்துள்ளது. மேலும், இருவரும் சென்னை சிறையில் இருந்து கடந்த ஜூலை மாதம்தான் வெளியே வந்துள்ளனர். இதனால் கையில் செலவுக்கு பணம் எதுவும் இல்லை. 

எனவே, கோவையில் உள்ள தனது நண்பரைத் தொடர்பு கொண்டு பேசி கோவை வந்துள்ளனர். அன்று தங்களின் நண்பரைப் பார்க்கச் செல்லும்போது ரமாதேவியிடம் செயினைப் பறித்துள்ளனர். அதற்கு முன்பாகவே கடலூரைச் சேர்ந்த பாபு (38), என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்துள்ளனர். இதையடுத்து, தமயந்தியிடம் நகை பறிக்க முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர். 

இவர்கள் கோவை மற்றும் பிறபகுதிகளில் வேறு ஏதேனும் நகை பறிப்பு, திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? அவருடைய நண்பர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம், இவ்வாறு காவல்துறையினர் கூறினார்கள்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...