சென்னை : ம.தி.மு.க. நடத்திய ஆளுநர் முற்றுகை போராட்டத்தில் செய்தி சேகரித்து வந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ம.தி.மு.க. நடத்திய ஆளுநர் முற்றுகை போராட்டத்தில் செய்தி சேகரித்து வந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ தலைமையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ம.தி.மு.க.,வினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். பொதுமக்கள் சிலரும் இந்த போராட்டத்திற்கு வந்திருந்ததால், அதிகளவிலான மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலிருந்த தேநீர் கடையில் வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தை ஆங்கில MIRROR NOW என்ற செய்தி தொலைக்காட்சி நிருபர் பிரமோத் மாதவ் செய்தியாக்க முயன்றார். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் செய்தியாளரை திடீரென தாக்கினார். அதில், பிரமோத்தின் கண்களில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் இது குறித்து புகார் அளித்தனர். தற்போது கிண்டி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிருபர் பிரமோத்தை தாக்கியவர் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன. அவரது பெயர் சுரேஷ்பாபு எனவும், தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் என்றும் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு தி.மு.க. திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.