திருப்பூர் : கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளர்கள் 2 பேர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் : கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளர்கள் 2 பேர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் ஷேக் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராசு, லோகு ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். 10 ஆழமுள்ள குழியை இருவரும் தோண்டி கொண்டிருந்த பொழுது, மேலே இருந்த மண் சரிந்ததில் இருவரும் குழியில் சிக்கினர். இருவரின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள், மண்ணில் சிக்கி தவித்த சின்ராசு என்பவரை முதலில் மீட்டனர். மேலும், மண் சரிவு அதிகமாக ஏற்பட்டதில் லோகுவின் உடல் மண்ணில் சிக்கி கொண்டது. தொடர்ந்து பொதுமக்கள் ஒரு மணி நேரம் போராடி லோகுவையும் மீட்டனர். இதில், லோகுவின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செப்டிக் டேங்க் தோண்டும் பணியின் போது, இரண்டு கட்டிட தொழிலாளிகள் மண்சரிவில் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் ஷேக் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராசு, லோகு ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். 10 ஆழமுள்ள குழியை இருவரும் தோண்டி கொண்டிருந்த பொழுது, மேலே இருந்த மண் சரிந்ததில் இருவரும் குழியில் சிக்கினர். இருவரின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள், மண்ணில் சிக்கி தவித்த சின்ராசு என்பவரை முதலில் மீட்டனர். மேலும், மண் சரிவு அதிகமாக ஏற்பட்டதில் லோகுவின் உடல் மண்ணில் சிக்கி கொண்டது. தொடர்ந்து பொதுமக்கள் ஒரு மணி நேரம் போராடி லோகுவையும் மீட்டனர். இதில், லோகுவின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செப்டிக் டேங்க் தோண்டும் பணியின் போது, இரண்டு கட்டிட தொழிலாளிகள் மண்சரிவில் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.