கோவை : உயிரிழந்த கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி மூதாட்டி ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : உயிரிழந்த கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி மூதாட்டி ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குந்நி முகம்மது என்பவரது இரண்டாவது மனைவி கண்ணம்மா என்கிற ரம்லத்.
நெடுஞ்சாலை துறையில் மேஸ்திரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற குந்நி முகம்மது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை முதல் மனைவிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், முதல் மனைவியும் உயிரிழந்ததால் கணவர் குந்நி முகமது பென்சனை தனக்கு தர வேண்டும் என ரமலத் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் கோரிக்கை விடுத்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள புளிய மரத்தில், மூதாட்டி திடீரென தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.