கோவை : குனியமுத்தூர் பகுதியில் கல்லால் தாக்கியதில் ஆதரவற்றவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெயிண்டர் ஒருவரை, கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோவை : குனியமுத்தூர் பகுதியில் கல்லால் தாக்கியதில் ஆதரவற்றவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெயிண்டர் ஒருவரை, கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் கடந்த 28-ஆம் தேதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், காயத்துடன் கிடந்தவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் என்றும், அவரை மூவேந்தர் நகரைச் சேர்ந்த செல்வம் (37) என்ற பெயிண்டர் கல்லால் தலையை தாக்கியது தெரியவந்தது.
சாலையோரம் படுத்து தூங்கிய பிச்சைக்காரரின் காலை மிதித்துள்ளார். இதனால், அவரை பிச்சைக்காரர் சத்தம் போட்டுள்ளார். ஆத்திரமடைந்த செல்வம் பிச்சைக்காரரின் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து செல்வத்தை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிச்சைக்காரர் இறந்தார். இதனால் இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் யார்..? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்று குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.