திருப்பூர் : தனியார் பள்ளிகளின் உதவியுடன் மாணவர்களிடையே இந்து முன்னணி அமைப்பினர் மதத்தை புகுத்துவதாகவும், இத்தகைய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் : தனியார் பள்ளிகளின் உதவியுடன் மாணவர்களிடையே இந்து முன்னணி அமைப்பினர் மதத்தை புகுத்துவதாகவும், இத்தகைய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்து முன்னணி சார்பில் வரும் 23,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மகா யாக பூஜை நடைபெற இருக்கிறது. இதற்கு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே பள்ளிகள் மூலம் பரப்புரை செய்து நெய், செங்கல் பெறுவதாகவும், மாணவர்களிடையே மதத்தை புகுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, மாணவர்களின் மனதில் தற்போதே நஞ்சை புகுத்துவதாகக் கூறி, இத்தகைய செயல்களை தனியார் பள்ளி நிர்வாகமும் அனுமதிப்பது கண்டிக்கத்தக்க செயல் என்பதால், மத பிரச்சாரத்திற்கு துணை போகும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலை கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்து முன்னணி சார்பில் வரும் 23,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மகா யாக பூஜை நடைபெற இருக்கிறது. இதற்கு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே பள்ளிகள் மூலம் பரப்புரை செய்து நெய், செங்கல் பெறுவதாகவும், மாணவர்களிடையே மதத்தை புகுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, மாணவர்களின் மனதில் தற்போதே நஞ்சை புகுத்துவதாகக் கூறி, இத்தகைய செயல்களை தனியார் பள்ளி நிர்வாகமும் அனுமதிப்பது கண்டிக்கத்தக்க செயல் என்பதால், மத பிரச்சாரத்திற்கு துணை போகும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலை கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.