கோவை : கோவை கே.எம் .சி.ஹெச் மருத்துவமனையில் இதய துடிப்பு மற்றும் இண்டர்வென்ஷனல் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவின் சார்பில் 2018-ம் ஆண்டிற்கான 3-வது கோவை ஹார்ட் ரிதம் மாநாடு இன்று நடைபெற்றது.
கோவை : கோவை கே.எம் .சி.ஹெச் மருத்துவமனையில் இதய துடிப்பு மற்றும் இண்டர்வென்ஷனல் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவின் சார்பில் 2018-ம் ஆண்டிற்கான 3-வது கோவை ஹார்ட் ரிதம் மாநாடு இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கோவையில் நடக்கும் சீரான இருதய மின்துடிப்பு பற்றிய கோவை ஹார்ட் ரிதம், இ பி அப்டேட் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள பல இருதய நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும், தேசிய அளவிலான புகழ் பெற்ற 25- க்கு மேற்பட்ட மருத்துவ கல்வியாளர்கள் பங்கேற்று, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடையே உரையாற்றினார்கள்.
இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், ’’ இருதய மின் துாண்டல் குறித்த ஒரு நாள் கல்வி கருத்தரங்காக இபி அப்டேட் ( EP Update ) அமையும். இருதய மின் தூண்டல் அடிப்படை மட்டுமின்றி, அதற்கு மேலும் அதிநவீன சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதில் இடம் பெறும். இருதயம் மெதுவாகச் செயல்படுதல், வேகமாகச் செயல்படுதலை மேலாண்மை செய்தல், இருதயத்தால் ஏற்படும் திடீர் மரணத்தைத் தடுத்தல், புதிய மருந்து மேலாண்மை, இருதயம் செயலிழத்தலை தடுக்கும் கருவிகள் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றி கருத்தரங்கில் விவாதித்தோம்," என்றார்.
"எலெக்ட்ரோபிசியோலஜி துறை (Electrophysiology Department) ஆற்றும் அரும் பணி இப்போதைய காலத்திற்கு தேவை. இன்றைய மக்களின் வாழ்க்கை நோய்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கே.எம்.சி.எச் மருத்துவமனை நோயாளிகளுக்குத் இக்கால சூழ்நிலைக்கு கேற்ப சிகிச்சையை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படவேண்டியவை அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படவேண்டியவை அல்ல. அவற்றை அறுவைச் சிகிச்சை செய்யாமல் மருந்துகளினாலும் சரி செய்யலாம். " என கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசினார்.