கோவை : கோவைக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை, 30 கிலோ கஞ்சா மூட்டையுடன் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவைக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை, 30 கிலோ கஞ்சா மூட்டையுடன் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக வரும் ரயில்களில் போதைப்பொருட்களை கடத்துவதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல்களின்படி, இன்ஸ்பெக்டர் வின்சென்ட் தலைமையில் காவல்துறையினர், கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மூட்டை உடன் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அந்த நபர் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (47) ,என்பது தெரிய வந்தது. மேலும், அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்களிடையே விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த மூட்டையைக் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதிலிருந்து, 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தி வந்த மாதவனும் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வழியாக வரும் ரயில்களில் போதைப்பொருட்களை கடத்துவதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல்களின்படி, இன்ஸ்பெக்டர் வின்சென்ட் தலைமையில் காவல்துறையினர், கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மூட்டை உடன் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அந்த நபர் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (47) ,என்பது தெரிய வந்தது. மேலும், அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்களிடையே விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த மூட்டையைக் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதிலிருந்து, 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தி வந்த மாதவனும் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.