செஞ்சேரியில் மூன்றாவது நாளாக நடைபெற்ற விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

கோவை : விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

கோவை : விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். 

இந்தத் திட்டத்தை, எதிர்த்து 70- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செஞ்சேரி மலையில் உள்ள சுல்தான்பேட்டை வெங்கிடராஜ் திருமண மண்டபத்தில் 3 -நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.



இதில், விவசாயிகளுடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் செய்த முயற்சி தோல்வியுற்றது. இந்நிலையில், இன்று மாலை கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் விவசாயிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். 

அந்தப் பேச்சு வார்த்தையில் , விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எடுக்கும் சர்வே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...