கோவை : கஜா புயலால் நிலைகுலைந்து போன வாழைமரங்களின், வாழைத்தார்கள் கோவையில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.
கோவை : கஜா புயலால் நிலைகுலைந்து போன வாழைமரங்களின், வாழைத்தார்கள் கோவையில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.

தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடந்த வாரம் கஜா புயல் தாக்கியது. இதில், பெரும்பாலானோர் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்திற்கு தவித்து வருகின்றனர். அதேபோல, லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னை, வாழை போன்ற மரங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் பேரிழப்பை சந்திதுள்ளனர். அவர்களுக்கான நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சில விவசாயிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் தென்னை மரங்களை மீண்டும் நிறுத்தி வருகின்றனர். ஆனால், வாழை விவாசாயிகளின் பாடோ திண்டாட்டமாகத்தான் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இந்த வாழைத்தார்களை வாங்க முன்பணம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கஜா புயல் தாக்குதலில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இந்த நிலையில். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு, இந்த வாழைத்தாத்கள் ஏலத்தின் மூலம் விற்கப்படுகிறது. இதன் மூலம், கிடைக்கும் தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.