'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா : கோவையில் மாம்பழத்தில் வாசகத்தைப் பொரித்த கருணாநிதியின் ரசிகர்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோவை தங்கநகை தொழிலாளியான 'உன்னால் முடியும் ராஜா' மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும், அவரது தலைமேல் பேனாமுனை வைத்து, அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பங்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தார். 

தற்போது, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா என்ற வாசகத்தை பழுத்த மாம்பழத்தில் ஓவியமாக வரைந்துள்ளார். ஆயில் பெயிண்ட் மட்டும் வாட்டர் கலர் மூலம் மூத்த அரசியல்வாதிக்கு ஒரு சிறிய கலைஞனாக இதனை தான் வரைந்ததாகவும், கலைஞர் கருணாநிதிதான் தன் இரு பெண்களுக்கும் காவிய தமிழ் மற்றும் அபிநய தமிழ் என பெயர் சூட்டியதாகவும் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...