கோவையில் வாகன விபத்தில் சிக்கி பெண் தலைமை காவலர் உயிரிழப்பு

கோவை: அன்னூர் அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தலைமைக் காவலர் பாக்கியம் உயிரிழந்தார்.

கோவை: அன்னூர் அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தலைமைக் காவலர் பாக்கியம் உயிரிழந்தார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அன்னூர் காவல் நிலையத்தின் தலைமை காவலரான பாக்கியம் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

பணியினை முடித்து விட்டு மீண்டும் காவல் நிலையம் செல்ல மேட்டுப்பாளையம்-சத்தி சாலை வழியாக அறிவொளி நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். விபத்து தொடர்பாக, அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...