தொடர்ந்து மிரட்டுகின்றனர்; வெளியில் நடமாடவே பயமாக இருக்கிறது - நடிகை சுருதி

கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.

கோவை: காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் வெளியே நடமாடவே பயமாக இருப்பதாகவும் நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், காவல் துறையினர் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அனுப்பியுள்ளேன். அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களைக் கொடுக்க உள்ளேன்.

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை கடத்தி கற்பழித்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளது. லண்டனில் படிக்க செலுத்திய ரூ.23 லட்சம் பணத்தை முடக்க காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...