கைத்தறிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியினை மத்திய அரசு நிச்சயம் குறைக்கும் : கோவையில் அமைச்சர் ஒ.எஸ்., மணியன் நம்பிக்கை

கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வரும் பிப்ரவரி மாதம் கோவை கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்திருப்பது என பொதுவாக சொல்வது சரியானது அல்ல. உற்பத்தியைப் போல நுகர்வோரும் மிகுதியாக இருப்பதால் ஜி.எஸ்.டி., யினால் தமிழகத்திற்கு குறைபாடு இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்.

மேலும், ஜி.எஸ்.டி., வரிகளைக் குறைக்க வேண்டுமென்பதை ஓங்கி ஒலிக்கிற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று சிலவற்றிற்கு ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கைத்தறிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். கைத்தறி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஜவுளித்துறை படிப்பு ஆராய்ச்சிகளுக்கு மானியம் மற்றும் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காலதாமதம் ஏற்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...