உடுமலையில் 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது

திருப்பூர்: உடுமலை அருகே கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை முதல் கல்லாபுரம் வரை செல்லும் சாலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது.

பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை பழுதடைந்தது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கியது. ஆனால், சாலை அமைக்க அமராவதி வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



அந்த சாலை புலிகள் காப்பகத்திற்குள் வருவதால், சாலை மேம்பாட்டு பணிகள் செய்ய மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாகனங்கள் இயக்க அனுமதிக்க முடியாது எனவும் சாலை அமைக்க விடாமல் நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் வனத்துறையை எதிர்த்து ஆா்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்த சாலை என்பதால் சாலையை புதுப்பிக்க அனுமதி அளித்தனர். 



இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...