ஒரு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல், குடோனுக்கு சீல் : திருப்பூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி

திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.



திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட பொருட்களை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஆய்வின் போது உணவுப்பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் சாமுண்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் கலப்பட டீத்தூள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமுண்டிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன்(45) என்பவர் டீ தூள் தயாரித்து பேக்கரி உள்ளிட்ட கடைகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

தொடர்ந்து அதிகாரிகள் அவரது குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர் டீத்தூளில் கலப்படம் செய்து குடோனில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அளவு கொண்ட கலப்பட டீத்தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.



மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்த டீத்தூள் பாக்கெட்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...