தமிழக மக்களைப் போலவே உறுதியாக இருக்கிறார் கருணாநிதி : சந்திப்புக்குப்பின் ராகுல் காந்தி பேட்டி

சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக மக்களைப் போலவே திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார் என்று அவரை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



 

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சூழலில், அவரைக் காண தி.மு.க., தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவமனைக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அவரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "தி.மு.க., தலைவர் கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல் அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததை அவரிடம் தெரிவித்தேன்." என்றார்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...