ஆம்புலன்சில் இருந்து பூமிக்கு வந்த குட்டி தேவதை : திருப்பூரில் ருசிகரம்

திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பூமிக்குத் தந்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பூமிக்குத் தந்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோகிலா-வின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடனிருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது கோகிலா-வுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.

பெண் குழந்தை

இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் அருணா, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கோகிலா-வுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். கடும் போராட்டத்திற்கு பிறகு, சுகப்பிரசவம் மூலம் கோகிலா-வுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, தாயையும், சேயையும் அதே ஆம்புலன்சில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...