கோவை அரசு பேருந்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை கடத்தல் : ஒருவர் கைது

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள காவல்துறை ஆய்வாளர் சசிதரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற தமிழக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

பேருந்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (31), என்பவரை பரிசோதித்ததில், அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடை கொண்ட வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, வைரங்களும், நகைகளும் கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதும், இங்கிருந்து கேரளாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மகேந்திரகுமாரிடமிருந்து வைரங்களை ஒப்படைக்க வேண்டிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வைரங்களை அவரிடம் ஒப்படைத்த நபர் யார்? கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை மீறி வைர நகைகள் கடத்தப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...