தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ரபீக் என்ற இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை ஈஸ்வரன் வீதியைச் சேர்ந்தவர் சதாம் உசேனின் மகன் ரபிக் (27). இவர் டவுன்ஹால் சுற்றுவட்டாரங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு ரத்த அணுக்கள் மெல்ல மெல்ல குறைந்து வந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து காய்ச்சல் சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், ரபீக்கிற்கு இரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்ததால் ரத்த அணுக்கள் செலுத்தப்பட்டது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று திடீரென மரணம் அடைந்தார். தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...