காட்டு யானைகள் ஊடுருவலைத் தவிர்க்க தேனீக்கள் வேலி அமைக்க முயற்சி

கோவை: கோவை வனக் கோட்டத்தில் ரூ. 1.28 கோடி செலவில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை வனக் கோட்டத்தில் ரூ. 1.28 கோடி செலவில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் அமைச்சர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பயிர்களை அழிக்கும் யானைகளை தடுக்க தேனீக்கள் மூலம் வேலி அமைக்கும் தொழில்நுட்பம், ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. செலவு குறைவான இத்திட்டத்தால், இயற்கை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.



இந்த நிதியாண்டில், கோவை வனக் கோட்டத்தில், ரூ. 1.28 கோடி செலவில், தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வனத்துறை களப்பணியாளர்கள், கடினமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென நிகழும் கடத்தல், ஆக்கிரமிப்பு, காட்டு தீ மற்றும் மனித - வன உயிரின மோதல் போன்ற நேரங்களில், அவற்றை எதிர்கொள்ள களப் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது அவசியம். இதற்காக, மாநிலத்தில் இரண்டு இடங்களில் உயர்நிலை படைகள் அமைக்கப்படும். இப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், உபகரணங்களுக்காகவும் ரூ. 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

வனத் துறைக்கு ரூ.5 கோடி ரூபாய் செலவில், மின்னணு கம்பியில்லாத தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்படும். கோவை அருகே ஆனைமலையில், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் ரீதியான, பல வண்ண மலர் தாவரங்களை கொண்ட, 'ஆர்க்கிட்' அரங்கம் அமைக்கப்படும். நாற்றங்கால் உற்பத்தி, பராமரிப்பு, அரங்கம் உருவாக்குதல் பணிக்காக, 46.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும். ஆனைமலையில் உள்ள, புல்வெளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய நில வரைபடம் தயாரிக்கப்படும், இவ்வாறு அவர் அறிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...