சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாய், மகன் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

வீரபாண்டி பகுதி தோட்டத்து தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. நெசவு தொழிலாளியான இவர், அவரது தாயார் பார்வதியை அழைத்துக் கொண்டு கண் பரிசோதனை செய்வதற்காகச் சென்றுள்ளார். திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் இருவர் மீதும் மோதியது. 

இந்த விபத்தில் அழகர்சாமியின் உயிர் பிரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...