கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு

கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் அவரது மனைவி அரசுப் பொறியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக இருக்கின்றார். பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி, குனியமுத்தூர் பகுதியில் 'மல்லிகா நர்சிங் ஹோம்' என்ற பெயரில் தனியாக மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.



அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90,51,269 அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து, பேராசிரியர் இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...