தொடர் மழையால் முதுமலை யானை சவாரி தற்காலிக ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது, கேரளாவில் ஒருதினத்திற்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரி தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

மேலும், தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை சவாரியை எதிர்பார்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



இது தொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், "பருவமழை துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழையின் போது யானை சவாரி ரத்து செய்ய வேண்டியுள்ளது. பருவமழை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலசூழலை பொறுத்து நடக்கும்," என்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...