கோத்தகிரியில் தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடி : தலைதெறிக்க ஓடிய தொழிலாளர்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 



இதனிடையே, கோத்தகிரி அரவேனு பெப்பேன் பகுதியில் கரடி குட்டியுடன் நடமாடி வருவதாக வெளியானத் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். இந்த நிலையில், தேயிலை தோட்டத்திற்குள் திடீரென குட்டியுடன் உலா வந்த கரடியைஙக கண்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஒட்டம் பிடித்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், கரடியைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டம் அருகே கூண்டு வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கும் வரை தேயிலை பறிக்கச் செல்வதில்லை என தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...