மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதால் போலீசார் உள்பட 20 பேர் பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கொட்டியதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இன்று திங்கட்கிழமை என்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்து, அதில் இருந்த தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியது. இதனால், குறைதீர்ப்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில், போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது. 

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று பொதுமக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள் இந்த தேனீக்கள் தாக்குதலால் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...