தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்கள் இவர்கள் தானாம்..!

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்க எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருந்தார். தற்போது இந்த துப்பாக்கி சூட்டை நடத்த ஆணையிட்டது யார், என்ன காரணமாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தையும் அதில் விளக்கியுள்ளனர்.



அவர்கள் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் 10,000-க்கும் அதிகமான "சமூக விரோதிகள்" கலகத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினார்கள். கலைந்து செல்லும்படி கூறியும் செல்லவில்லை. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் யாரும் செல்லவில்லை. "சமூக விரோதிகள்" கலைந்து செல்லவே இல்லை. கண்ணீர் புகை குண்டு, லத்தி சார்ஜ், ரப்பர் குண்டு என எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் மக்கள் கலையவில்லை.



கலவரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரிவாள், கத்தி, கம்புகளுடன் மக்கள் போலீசை தாக்கினார்கள். அரசு அலுவலகத்தை பெட்ரோல் குண்டுகளுடன் மக்கள் முற்றுகையிட முயற்சித்தார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள். திரேஸ்புரத்தில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் மீண்டும் கலவரம் செய்தனர். 100 பெண்கள் உட்பட 500 பேர் வரை காவல் நிலையத்தில் நுழைய முயன்றனர். கலவரக்காரர்கள் போலீசாரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் பிரச்சனையாகும் என்று துப்பாக்கி சூடு நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தூத்துக்குடி துணை வட்டாச்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...