மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (42), பகுதி நேர ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் திருமலை என்பவர், தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி வீடு வாங்கி தருவகாக ரூபாய் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயக்குமார் அப்பகுதி மக்களிடமிருந்து வீடு வாங்கி தருவாக கூறி ரூபாய் 12 லட்சம் வரை பணம் பெற்று திருமலைக்கு கொடுத்துள்ளார்.

இதனிடையே, திருமலை அப்பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஜெயக்குமாரிடம் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர்.



இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திருமலை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மனைவி சுகுணாவிடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.



தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், சிகிச்சைக்காக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...