தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நிவாரணத் தொகை அதிகரிப்பு - முதலமைச்சர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த பேரணியில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. அரசே தன் மக்களை கொலை செய்வது அரச பயங்கரவாதம் என்று தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி கிடைத்தது. தொடர்ந்து, உயிரிழந்தோர், படுகாயமடைந்தோர் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 'வகை வகையாய்' நிவாரணத் தொகையை வழங்குவதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர்க்கான நிவாரணத் தொகையை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக நிவாரணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகுந்த துயரமும், மனவேதனையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...