விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கடனுதவி அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் விவசாயிகள் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் விவசாயிகள் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க 50 சதவிகிதம் வரை மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த விவசாயிகள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நில உடமைக்கு ஆதாரமான கணினி வழிபட்டா மற்றும் அடங்கல் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய சிறு, குறு விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலுககத்தில் உரிய விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...