மேட்டுப்பாளையத்தில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு தொடக்கம்: இயற்கையின் அழகை 'ஈகிள் வியூ' பார்வையில் கண்டுரசிக்க பொதுமக்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாகச விளையாட்டு கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், பங்கேற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளம் வயதினருக்கு, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் மனதில் உள்ள தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கி, மனவலிமை கொண்டவர்களாக எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற இது போன்ற சாகச விளையாட்டுக்கள் உதவும் என நம்பப்படுகிறது. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறை காலங்களிலும் பலூன் மூலம் குறிப்பிட்ட உயரம் வரை வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விளையாட்டு பூங்கா [பிளாக் தண்டர்] மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த சாகச விளையாட்டு இந்திய விமானப் படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே சீரான சீதோசனம் மற்றும் அளவான காற்று வீசும் பகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே ஆண்டுதோறும் பலூன் திருவிழா மற்றும் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாக துறைச் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுவதால், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்று இயற்கையின் அழகை ஈகிள் வியூ எனப்படும் கழுகுப் பார்வையில் காண சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...