வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.
வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.
பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது மறைவுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது மறைவுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.