தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் 4 பேர் முன்னிலையில், 6 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை லேசான தடியடி நடத்தியே போலீசார் விரட்டியடித்தனர்.
பொதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணமாக வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 நீதிபதிகள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு, பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் 4 பேர் முன்னிலையில், 6 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை லேசான தடியடி நடத்தியே போலீசார் விரட்டியடித்தனர்.
பொதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணமாக வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 நீதிபதிகள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு, பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.