இரு காதலிகளை ஒரே நேரத்தில் மணக்கும் ரொனால்டினோ

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார்.

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் ஒருவரான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது 2 காதலிகளையும் திருமணம் செய்ய உள்ளார். 

பிரேசில் நாட்டுக் கால்பந்து அணிக்காக விளையாடியவர் உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ (38). பிரேசில் அணிக்காக 97 சர்வதேசப் போட்டிகளில் 33 கோல்களை அடித்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2002-ல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஃபிபாவின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ஜெர்மியோ, பி.எஸ்.ஜி., பார்சிலோனா கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 167 கோல்களையும் அடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிசிலா கோயல்ஹோ மற்றும் பீட்ரிஸ் சௌசா ஆகிய இரண்டு பேரை அவர் காதலித்து வந்தார். சௌசாவுடன் 2016-ல் இருந்து பழகத் தொடங்கினார். ஆனால், அதற்கு முன்பே கோயல்ஹோவுடன் பழகி வந்தார். இருவருடனான நட்பையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து வந்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில், தன்னுடைய காதலை இருவரிடம் கூறியுள்ளார். இருவருடனும் அவர் மோதிரம் மாற்றிக் கொண்டார். ரியோடிஜெனிரோவில் உள்ள தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் கடந்தாண்டு டிசம்பரில் குடியேறினார். 

இதனிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரொனால்டினோ கூறியிருந்தார். இவர்களில் யாரை அவர் திருமணம் செய்வார் என்று பட்டிமன்றம் நடந்து வந்தது. ஆனால், இருவரையுமே அவர் திருமணம் செய்யப் போவதாக பிரேசில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருவருக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை ரொனால்டினோ வாங்கி குவித்து வருகிறார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...