அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவான 'மேகுனு' புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மத்திய அரபி கடல் பகுதியில் இருந்து, தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் வரும் நாளை மறுநாள் (மே 26) ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. இன்று மணிக்கு 160 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான், நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, தமிழக மீனவர்கள் 26-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்குள், மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய கடற்பகுதியில் நேற்று துவங்குவதாக இருந்த தென் மேற்கு பருவமழை, புயல் காரணமாக தாமதமாகியுள்ளது. நேற்று முதல், பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் தெரிவதால், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவான 'மேகுனு' புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மத்திய அரபி கடல் பகுதியில் இருந்து, தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் வரும் நாளை மறுநாள் (மே 26) ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. இன்று மணிக்கு 160 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான், நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, தமிழக மீனவர்கள் 26-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்குள், மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய கடற்பகுதியில் நேற்று துவங்குவதாக இருந்த தென் மேற்கு பருவமழை, புயல் காரணமாக தாமதமாகியுள்ளது. நேற்று முதல், பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் தெரிவதால், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.