தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம்: கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 



தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கு போலீசார் 3-வது நாளாக குவிக்கப்பட்டனர். இதனால், தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளான கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவர்கள் சிலர் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்களின் நலனைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், போலீசாரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோசங்களை எழுப்பினர். பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி., மைதானத்தில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...